/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பிரமுகருடன் பெண் இருவர் விபத்தில் பலி
/
அ.தி.மு.க., பிரமுகருடன் பெண் இருவர் விபத்தில் பலி
ADDED : ஏப் 22, 2025 07:19 AM

கடலுார்: கடலுார் அருகே பைக் மீது கார் மோதியதில், அ.தி.மு.க., பிரமுகர் உட்பட மூன்று பேர் இறந்தனர்.
கடலுார் அடுத்த எம்.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு, 60; அ.தி.மு.க., கிளைச் செயலர். இவரது மனைவி சுதா; முன்னாள் ஊராட்சி தலைவர்.
கடலுார் அடுத்த நாகியநத்தம் கிராமத்தில் உள்ள தன்முந்திரி தோப்பிற்கு சரண்யா, 25, கல்பனா, 25, ஆகிய பெண்களுடன் நேற்று காலை 6:30 மணிக்கு பைக்கில் நேரு சென்று கொண்டிருந்தார்.
கடலுார், ராமாபுரம் அருகே, விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, எதிரில் வேகமாக வந்த, 'பொலிரோ' கார், பைக் மீது மோதியது. பைக் துாக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த நேரு மீட்கப்பட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விபத்து குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.