/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
ADDED : மார் 31, 2025 11:18 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் வழங்கினார்.
விழாவில், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் மகேந்திரன், பாலமுருகன், மாரிமுத்து பங்கேற்றனர்.