sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., பழனிசாமிக்கு பலாப்பழ மாலையுடன் வரவேற்பு

/

அ.தி.மு.க., பழனிசாமிக்கு பலாப்பழ மாலையுடன் வரவேற்பு

அ.தி.மு.க., பழனிசாமிக்கு பலாப்பழ மாலையுடன் வரவேற்பு

அ.தி.மு.க., பழனிசாமிக்கு பலாப்பழ மாலையுடன் வரவேற்பு


ADDED : ஜூலை 15, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி வந்த அ.தி.மு.க., மாநில செயலாளர் பழனிசாமிக்கு, ஒரு டன் பலாப்பழ மாலையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., சார்பில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பிரசார பயணம் பண்ரூட்டி தொகுதியில் நேற்று நடந்தது. பிரச்சார பயணத்திற்கு வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, பண்ருட்டி நகர அ.தி.மு.க.செயலாளர் மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பழனிசாமிக்கு கடலுார் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு டன் எடை கொண்ட பிரமாண்ட ரோஜாப்பூ மாலை அணிவித்தனர்.

பண்ருட்டி பஸ் நிலையம் முன்பு ஒரு டன் எடையுள்ள பிரமாண்ட பலாப்பழ மாலை கிரேன் மூலம் அவருக்கு அணிவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரவேற்பை தனது பிரச்சார பஸ்சில் இருந்து பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தராஜ், முன்னாள் தலைவர்கள் ராஜா, முருகன், புஷ்பாவதி சிவசந்திரன், நகர அவை தலைவர் ராஜதுரை, இணை செயலாளர் சத்யா கலைமணி, நகர ஜெ., பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கார்த்திக், மாவட்ட பரிதிநிதி சர்புன்னிசா சலாவூதின், சீனுவாசன், கவுன்சிலர்கள் முருகன், சரளா மோகன், பிரியா பாக்கியராஜ், சுவாதி பாக்கியராஜ், முன்னாள் கவுன்சிலர் காணை ரமேஷ், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், முன்னாள் தர்கா கமிட்டி தலைவர் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us