/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 06:46 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட அவை தலைவர் தங்கராசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை செயலர் அருள் அழகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் அருண் முன்னிலை வகித்தனர்.
நகர செயலர் சந்திரகுமார் வரவேற்றார்.
மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கடலுார் மாவட்டத்திற்கு வரும் பொதுச் செயலர் பழனிசாமி சிறப்பான வரவேற்பு அளிக்க வேணடும் என பேசினார்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, வேல்முருகன், தம்பிதுரை, பச்சமுத்து, நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், புஷ்பா வேங்கடவேணு, கருப்பன், மனோகரன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜ்மோகன், அருள், நவீன்ராஜ், சோமு, திருப்பதி, பேரூராட்சி செயலாளர்கள் அரங்க நீதிமன்னன், பாலமுருகன், மணிகண்டன், மனோகரன், தகவல் தொழில்நுட்ப அணி முத்தமிழ்செல்வன், நகர பேரவை செயலாளர் அருள், இளைஞரணி செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 12, 14ம் தேதிகளில் கடலுார் மாவட்டத்திற்கு 'தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்கு வரும் பொதுச் செயலர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா நன்றி கூறினார்.