ADDED : ஆக 18, 2025 11:53 PM

பரங்கிப்பேட்டை; கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், புதுச்சத்திரத்தில் திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை பாலசுந்தரம் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பாண்டியன் எம்.எல்.ஏ., பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஒன்றிய பாசறை செயலாளர் விஜயராஜா, நகர இளைஞரணி செயலாளர் சங்கர், நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், ரவி, இலக்கிய அணி செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ் பங்கேற்றனர்.