ADDED : ஜூலை 07, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை நந்திமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அப்பகுதியைச் சேர்ந்த தேவக்குமார், 39, என்பவரை கைது செய்து, 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.