ADDED : ஜூலை 25, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கள் ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று பூந்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கஸ்பா பகுதியை சேர்ந்த ராஜா மகன் சிவராஜ், 22; என்பவர் கள்ளத்தனமாக அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக் குப் பதிந்து சிவராஜை கைது செய்து, 40 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுபாைஷ தேடி வருகின்ற னர்.