ADDED : நவ 21, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மயில்வாகணன், 56; என்பவர், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, மயில்வாகணனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

