ADDED : செப் 12, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
வடலுார்: மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்
வடலுார் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் குழுவினர் நேற்று காலை, தென்குத்து பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள கருப்புசாமி கோவில் அருகே சென்ற வடலுார், காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த பழனி மகன் சங்கர் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சங்கரை கைது செய்து, 8 மதுபாட்டில்கள், பைக், 5,800 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
