ADDED : ஆக 18, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று காலை, மேல் பூவாணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெருமாள் ஏரிக்கரை ஷட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், மேல்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த சரவணன், 39; என்பதும், மதுபாட்டில் கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.