ADDED : அக் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் குற்றவியல் போலீசார் நேற்று முன் தினம் இரவு கீரப் பாளையைம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது காரைக்காலில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் புதுச்சேரி மதுபாட்டில் 5 இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக புவனகி ரி போலீசார், கீரப்பாளையம் வடஹரிராஜபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த தமிழரசன்,37; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

