/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் தேவை
/
பெண்ணாடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் தேவை
ADDED : செப் 19, 2024 11:30 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பெண்ணாடம், குறுவட்ட தலைமையிடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.
இங்குள்ள பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், சவுந்திரசோழபுரம், செம்பேரி, அரியராவி, மாளிகைக்கோட்டம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், விருத்தாசலம், திட்டக்குடி, கடலூர், திருச்சி, சென்னை, அரியலுார், ஜெயங்கொண்டம் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
அவ்வாறு இரவு நேரங்களில் பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் வருவோர் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்யும் சூழல் உள்ளது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.