ADDED : ஏப் 11, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கோ.பவழங்குடி சுயம்பு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்து வருகிறது.
நேற்று 10ம் தேதி காலை 8:50மணியளவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், கோவில் நிர்வாகி வெங்கடசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள்திருத்தேர் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று 11ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 8:00 மணிக்கு நடக்கும் விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர பெருவிழா நிறைவடைகிறது.