ADDED : நவ 06, 2025 05:20 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் அன்னாபி ேஷக வழிபாட்டில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் அன்னாபி ேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு அபி ேஷகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு அன்னம் சாற்றுதல் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மாலை 6:00 மணியளவில் அன் ன அலங்காரத்தில் ஏகநாயகர் சுவாமி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் தெய்வ தமிழிசையுடன் கூடிய மஹா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னலிங்க சுவாமி கோவிலை வலம் வந்து, நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மங்கலம்பேட்டை, மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவில்களில் அன்னாபி ேஷக விழா நடந்தது.

