ADDED : ஏப் 02, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார். டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் இயக்குநர் சாந்தி ராஜமாரியப்பன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாலை, கீரிடம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் சரோஜினி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜஸ்ரீ பாக்கியராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுப்புமுருகன், ஆசிரியர்கள் சாந்தி, மேரி புஷ்பலதா, லயோனா, கீதாமஞ்சித், ஆரோக்கியதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

