sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு வண்டிகள் சிறைபிடிப்பு

/

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு வண்டிகள் சிறைபிடிப்பு

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு வண்டிகள் சிறைபிடிப்பு

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு வண்டிகள் சிறைபிடிப்பு


ADDED : டிச 03, 2024 06:31 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை வண்டிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம், சலங்கை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதில் குப்பை கிடங்கிலிருந்தும் குப்பைகள் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 10:30 மணிக்கு மாநகராட்சியிலிருந்து ஆறு குப்பை வண்டிகள், குப்பைகளை கொட்டுவதற்கு கிடங்குக்கு சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குப்பை வண்டிகளை சிறை பிடித்து குப்பைகளை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் சமாதானம் அடையாததால், குப்பை வண்டிகள் திருப்பி அனுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us