/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு : விருதை பள்ளியில் பாராட்டு விழா
/
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு : விருதை பள்ளியில் பாராட்டு விழா
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு : விருதை பள்ளியில் பாராட்டு விழா
தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு : விருதை பள்ளியில் பாராட்டு விழா
ADDED : அக் 30, 2025 07:30 AM

விருத்தாசலம்: தேசிய அளவிலான பேஸ்பால் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவருக்கு, விருத்தாசலத்தில் பாராட்டு விழா நடந்தது.
விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், விருத்தாசலம் குறுவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வாலிபால் மற்றும் பீச் வாலிபால் பந்து போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். மேலும், கடலுார் வருவாய் மாவட்ட அளவில் வாலிபால் மற்றும் பீச்வாலிபால் போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர்.
தொடர்ந்து, கடலுார் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள், தொழுதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர், ஹரிஹரன், முதலிடம் பிடித்து, தமிழக அணிக்கு தேர்வானார்.
மாணவர் ஹரிஹரன், தமிழக அணி சார்பில் திருச்சி மாவட்டத்தில், கொங்குநாடு இன்ஜி., கல்லுாரியில் நடந்த தேர்வு போட்டியில் வெற்றி பெற்று, தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். விரைவில் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதையடுத்து, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர் ஹரிஹரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராணி, விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

