ADDED : செப் 22, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் சார்பில் மேல்பட்டாம்பாக்கம் ஒன்றிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சரவணன் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினர். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி, சங்கர், அரிமா மாவட்ட தலைவர் ரவிசங்கர், மண்டல தலைவர் ஜெயசந்திரன், வட்டார தலைவர் பிரபாகரன், தலைவர் ஸ்ரீதர், செயலாளர் நாகலிங்கம், பொருளாளர் கார்த்திகேயன், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டினர்.