sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஜகஸ்தான் பெண்ணை கரம் பிடித்த அரியலுார் இளைஞர்

/

கஜகஸ்தான் பெண்ணை கரம் பிடித்த அரியலுார் இளைஞர்

கஜகஸ்தான் பெண்ணை கரம் பிடித்த அரியலுார் இளைஞர்

கஜகஸ்தான் பெண்ணை கரம் பிடித்த அரியலுார் இளைஞர்


ADDED : டிச 16, 2024 04:40 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடத்தில் நடந்த மா.கம்யூ., மாவட்ட மாநாட்டில், கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை, அரியலூர் மாவட்ட இளைஞர் திருமணம் செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சரஸ்வதி தம்பதியின் மகன் பிரபாகரன், 33. இவர், கடந்த 3 ஆண்டு களுக்கு மேலாக ஷார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த அய்டானா ஷயக்மேதோவா என்ற பெண்ணுடன் பிரபாகரனுக்கு காதல் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அவர்கள் திருமணத்திற்கு இருவர் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். பிரபாகரனின் உறவினர் மா.கம்யூ., நிர்வாகியாக உள்ளார்.

அவரது அறிவுறுத்தலின்பேரில், கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மா.கம்யூ., மாவட்ட மாநாட்டில் நேற்று பகல் 11:30 மணியளவில் பெற்றோர், உறவினர்கள், மா.கம்யூ., நிர்வாகிகள் முன்னிலையில் இந்து மதம் முறைப்படி பிரபாகன், அய்டானா ஷயக்மேதோவாவுக்கு தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us