ADDED : அக் 16, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது.
தமிழக அரசின் கல்வித் துறை உத்தரவின் பேரில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டகளை நடத்தி வருகின்றனர். இதில் புவனகிரி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் (மேற்கு) நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும், ஆதிவராக நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் போட்டிகள் தனித்தனியாக நடந்தது.
இதில் தொடக்க நிலையில் 80 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், நடுநிலையில் 20க்கு மேற்பட்ட பள்ளிகள் என 200 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இரு பள்ளிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.