நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் நகராட்சி துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் தேவசகாயம் தலைமை தாங்கினார். சென்னை நாடகசபா குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடத்தினர். அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.
பரப்புரையாளர்கள் சுதா, அபிநயா, மேற்பார்வையாளர் மலர்விழி கலந்து கொண்டனர்.

