நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: தேய்பிறை அஷ்டமியொட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி சிவன் கோவில்களில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 7:30 மணியளவில் மூலவர் சுவாமிக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணியளவில் வாளகத்தில் உள்ள பைரவர் சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், மஞ்சள் ஆகியவைகளால் அபிஷேகம், தொடர்ந்து 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பைரவர் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில் பைரவர் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.