நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு நேற்று மாலை 4:30 மணியளவில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய், எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

