/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது
/
ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவர் கைது
ADDED : ஜன 12, 2026 02:56 AM
பெண்ணாடம்:ஓட்டல் ஊழியரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த அருகேரியை சேர்ந்தவர் தமிழழகன், 32; இவர் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலில் வேலை பார்க்கும் அருகேரி தினேஷ்பாபு, 26, என்பவருக்கும், அங்கு சாப்பிட வந்த பெ.பொன்னேரி, திடீர் குப்பத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் கவியரசன், 23; ரகுநாதன் மகன் பிரசாந்த், 19; சின்னதம்பி மகன் ஸ்ரீகாந்த், 22; ஆகிய மூவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.
ஆத்திரமடைந்த மூவரும் தினேஷ்பாபுவை தாக்கி, ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலியை சேதப்படுத்தினர். காயமடைந்த தினேஷ் பாபுவை அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து கவியரசன் உட்பட மூவரை கைது செய்தனர்.

