/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு
/
தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு
ADDED : ஜன 07, 2024 05:46 AM
கடலுார்; பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவத்துார் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சியில், எஸ். ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) காலை 11:00 மணியளவில் சேமக்கோட்டை ஊராட்சி எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதி அருகே நடக்கிறது. சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.