sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

/

உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு


ADDED : நவ 10, 2024 05:04 AM

Google News

ADDED : நவ 10, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : உரங்கள், யூரியா இருப்புகள் குறித்து தனியார் உரக்கடைகளை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு குறுவட்டம், மேல்புவனகிரி பகுதிகளில் 10 ஆயிரம் எக்டர் சம்பா பருவ நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் வளர்ச்சி பருவத்தை எட்டி வரும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், யூரியாக்கள், இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உரவிற்பனை நிலையங்கள், தனியார் கடைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு, புவனகிரி தாலுகாவில் நெல் சாகுபடிக்கு தேவையான 25 மெட்ரிக் டன் யூரியா, 60 மெட்ரிக் டன் டி.ஏ.பி., பொட்டாஷ், இடுபொருட்கள் என அனைத்தும் ஆங்காங்கே உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், துணை விரிவாக்க மைங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய இருப்புகள் கடந்த ஒருமாதத்திற்கு முன்பே வைக்கப்பட்டுள்ளது.

சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை அங்கீகரிக்கபட்டுள்ள உர விற்னை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் , வேளாண் விரிவாக்க மையங்களில் உரிய ரசீதுகளுடன் உரங்களை வாங்குமாறு விவசாயிகளிடம் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us