ADDED : ஜன 08, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கேப்பர்மலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, மாநிலசெயற்குழு ஆறுமுகம், கோவிந்தசாமி கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.
இதில், மின்சார சட்ட திருத்த மசோதா 2025ஐ திரும்பப்பெற வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களுடன் பேசி நிறைவேற்ற வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர், கம்பியாளர் மற்றும் கணக்கீட்டாளர் உள்ளிட்ட 42ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

