ADDED : ஏப் 11, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: இந்திராநகர் பாலமுருகன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் இந்திரா நகர் பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று 10ம் தேதி காலை 11:00மணியளவில் நடந்த தேர் திருவிழாவில், பாலவிநாயகர், பாலமுருகன், மாரியம்மன் சுவாமிகள் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று 11ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து காவடி ஊர்வலம் நடக்கிறது.