/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜன 28, 2026 07:12 AM

கடலுார்: கடலுார் மாவட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர்.
வங்கிதுறையில் வாரத்தில் 5 தினங்களுக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுாரில் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பீச்ரோட்டிலிருந்து ஊர்வலமாகசெல்ல முயன்றனர். தகவலறிந்த போலீசார் ஊர்வலம் செய்ய அனுமதியில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து கடலுார் இந்தியன் வங்கி முன்புஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மீரா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராவ் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

