/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : நவ 15, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் முக்குளம், பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு மேல், இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனை, காலை 9:00 மணியளவில் கடம் புறப்பாடுடன் பிடாரி செல்லியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி, கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.