/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
/
பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
ADDED : ஜன 04, 2026 04:18 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், சிதம்பரம் சட்டசபை தொகுதிக்கான பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடந்தது.
தொகுதி அமைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சுரேஷ், பகிதரன், குமார், சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் அகத்தியர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ், தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோசலை, ராமதாஸ், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாபதி சிவம் நன்றி கூறினார்.

