/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் பா,ஜ., ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் பா,ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2025 12:54 AM

சிதம்பரம்: கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட மகளிரணி தலைவி இந்திராணி தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர்கள் ராகேஷ், அகத்தியர்,மாவட்ட பொருளாளர் சீனுசங்கர், மாவட்ட துணை தலைவர் அர்ச்சனா ஈஸ்வர், மாலா இருதயராஜ் முன்னிலை வகித்தனர்.
சிறப்புஅழைப்பாளராக மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் காயத்ரி,மாவட்ட தலைவர் தமிழ்அழகன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், நிர்வாகிகள் கோபிநாத் கணேசன், ஸ்ரீதரன், கிருஷ்ணராஜ்,பெருமாள், ரகுபதி, வெற்றிவேல், சரவணகுமார், கல்யாணசுந்தரம்,முருகன், உமாபதி சிவம், மகளிரணியினர் வேல்விழி,சாந்தலட்சுமி,கலைவாணி, செந்தமிழ்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர்.

