/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் திருட்டு
ADDED : நவ 07, 2025 12:54 AM
சேத்தியாத்தோப்பு: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை, 48; இவரது மனைவி தேவி, 46; அரசு ஊழியர்களான இருவரும் வெளியூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளிக்கு பிறகு, 10 நாட்களுக்கும் மேலாக, இருவரும் வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில், கனகசபை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதி மக்கள் சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரித்தனர்.
போலீசா் வீட்டை சோதனை செய்தனர். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் திருடு போனது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

