
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் ஸ்ரீஜெயின் சங்கம் மற்றும் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை சார்பில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை ஜெயின் சங்க நிர்வாகி தில்சுக்மல் மேத்தா துவக்கி வைத்தார். ஜெயின் சங்க செயலாளர் ஹத்தீஸ்குமார் முன்னிலை வகித்தார். சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் மிட் டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஆசைத்தம்பி, பொருளாளர் அப்பர்சாமி, ரோட்டரி சங்கத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் பார்த்திபன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தாயுமானவர் மற்றும் ஜெயின் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முகாமில் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.

