/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வைகோ பிறந்த நாளையொட்டி கடலுாரில் ரத்த தானம்
/
வைகோ பிறந்த நாளையொட்டி கடலுாரில் ரத்த தானம்
ADDED : செப் 25, 2024 11:07 PM

கடலுார் : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ 81 வது பிறந்த நாளையொட்டி, கடலுார் அரசு மருத்துவமனையில் 16 பேர் ரத்த தானம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தலைமை கொள்கை விளக்க அணிச்செயலாளர் வந்தியத்தேவன், தலைமை கழக பேச்சாளர் ராசாராமன் பங்கேற்றனர். ரத்ததான பிரிவு மருத்துவர் குமார், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார்,மாவட்ட பொருளாளர் மதன், மாவட்ட இணை செயலாளர் பழனி, தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் கடலுார் கண்ணன், குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் பரணி, மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புகழேந்தி, கடலுார் மாநகர அவைத்தலைவர் வெங்கட்நாராயணன், துணை செயலாளர் ராஜ், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் ஆதித்யா, பேச்சாளர் சங்கர், குறிஞ்சிப்பாடி இளைஞரணி சம்பத்குமார், மணிகண்டன், ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.