/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்
/
பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்
ADDED : நவ 29, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: மழை காரணமாக நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்திற்கு, தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில், மழை காரணமாக நேற்று காலை 10;30 மணிக்குமேல் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால், படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர்.
பாதுகாப்பு கருதி மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் இயக்கப்படும் படகுகளும் நிறுத்தப்பட்டது.