sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை

/

கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை

கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை

கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை


ADDED : நவ 08, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிமற்றும் காவல்துறை சார்பில் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலைகளில் கால்நடை சுற்றி திரிவதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குபேரூராட்சி சேர்மன் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசுகையில், சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை, மாட்டின் உரிமையாளர்கள் வீட்டில் கட்டி வைக்க வேண்டும் , தெருவில் கால்நடைகளை அவிழ்த்து விடக்கூடாது. சாலையில் உள்ள கால்நடைகளை பேரூராட்சி சார்பில் பிடித்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் அண்ணாமலைநகர் பகுதியைச் சேர்ந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us