ADDED : பிப் 13, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் கர்னத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரா, 26, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வீ ராவை கைது செய்தனர்.