/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது
/
குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது
ADDED : ஜன 29, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த சபியுல்லா, 49; படுகாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 43, ஆகியோர் தனது பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சபியுல்லா, ரவி ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.