ADDED : மே 13, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
வேப்பூர் அடுத்த சிறுநெசலுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் நரேஷ்,5; தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார்.
நேற்று மாலை 6:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள குளத்தின் கரையில் சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது, தவறி குளத்தில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே நரேஷ் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.