sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு விருத்தாசலம் அருகே சோகம்

/

ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு விருத்தாசலம் அருகே சோகம்

ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு விருத்தாசலம் அருகே சோகம்

ஓடையில் மூழ்கி சிறுவன் சாவு விருத்தாசலம் அருகே சோகம்


ADDED : மார் 23, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவதி. மகன் அசோகவரதன், 7, மகள் சுதர்ஷினி, 4. நேற்று மாலை 4:00 மணியளவில், புஷ்பவதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகே விளையாடிக் கொண்டிருந்த அசோகவரதன் அங்குள்ள ஓடையில் இறங்கியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அசோகவரதன் நீரில் மூழ்கி கிடப்பது தெரிய வந்தது. உடன், புஷ்பவதி அலறல் சப்தம் கேட்டு, உறவினர்கள் சிறுவனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us