ADDED : ஜூலை 17, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் அலமேலு ஸ்ரீவத்சன் வரவேற்றார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பிரபாகர் ராவ், பொதுச் செயலாளர் சுரேஷ், பண்ருட்டி கிளை துணைத் தலைவர் சிவசுப்பிமணியன்பேசினர்.
பொருளாளர் கணேசன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். அமைப்பு செயலாளர் சுரேஷ், ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், பாலகுரு, ராகவன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.

