/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : மே 04, 2025 05:29 AM

கடலுார் : சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
தவளக்குப்பம் அருகே, கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட சிங்கிரிகுடியில் பிரசித்திப் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. அதை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமி நரசிம்மர் கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 6ம் தேதி நாக வாகனத்தில் சாமி புறப்பாடு, 7ம் தேதி கருட சேவை, 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. உற்சவ நாட்களில் தினசரி காலை பல்லக்கில் சாமி வீதி புறப்பாடு, இரவில் வாகனங்களில் புறப்பாடு நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் சிங்கிரிகுடி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.