sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்

/

 திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்

 திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்

 திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்


ADDED : நவ 18, 2025 07:39 AM

Google News

ADDED : நவ 18, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: திருமணமான 2 மாதத்தில், புதுப்பெண் 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவர் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த செவிலியராக வேலைபார்க்கும் பெண் ஒருவருக்கும், அப்பகுதி வாலிபருக்கும் கடந்த செப்., 4ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பெண் வயிறு வலிப்பதாக கூறியதால், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அப்பெண் 9 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்தபோது, திருமணத்திற்கு முன்பு, உடல்நிலை சரியல்லாத தனது மாமனை கவனித்து கொள்ள சென்றபோது, அவருடன் பழக்கம் ஏற்பட்டு, கர்ப்பமானது தெரியவந்தது. அப்பெண்ணுக்கு, 17 வயது என்பதால் போக்சோ பிரிவின் கீழ் லிங்கமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

லிங்கமுத்து கடந்த 2 மாதமாக கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மணமகள் வீட்டாரிடம் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us