/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் அடைப்புகள் சரி செய்யும் பணி
/
பாலத்தில் அடைப்புகள் சரி செய்யும் பணி
ADDED : ஆக 18, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு :  கடலுார்-பாலுார் சாலையில் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் புதர்களை அகற்றும் பணி நடந்தது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் சார்பில் கடலுார் - பாலுார் சாலையில் பாலம், சிறு பாலம் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள அடைப்பு மற்றும் புதர்கள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.
உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவிப் பொறியாளர் மணிவேல் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.

