ADDED : ஏப் 04, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கரும்பூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன்,63;அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன்,58; சகோதரர்கள். இருவருக்கும் வழி சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது.
இருவரும், உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற போது தகராறு ஏற்பட்டது.
அப்போது, கலையரசனை, கண்ணதாசன் மற்றும் இவரது மகன்கள் தினகரன்,ஜெயசீலன் ஆகிய மூன்று பேர் தாக்கி கத்தியால் குத்தினர்.
பலத்த காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கண்ணதாசனை கைது செய்தனர்.

