/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது பஸ் மோதி விபத்து: ஒருவர் பலி
/
பைக் மீது பஸ் மோதி விபத்து: ஒருவர் பலி
ADDED : அக் 31, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அஜய் கோஷ்,24, வழக்கறிஞர். இவர் கடந்த ஒன்றரை வருடமாக கடலுாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சட்டஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12மணிக்கு கடலுார் பண்ருட்டி சாலையில் கோண்டூர் அருகே பல்சர் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் பைக்கில் மோதியது. இதில் அஜய்கோஷ், தலைநசுங்கி இறந்தார்.
புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.