/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.சாத்தமங்கலத்தில் குரங்குகள் பிடிப்பு
/
சி.சாத்தமங்கலத்தில் குரங்குகள் பிடிப்பு
ADDED : ஜன 23, 2026 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தினமலர் செய்தி எதிரொலியாக குரங்குகளை பிடித்து வனத்துறையினர் காப்புக்காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அடுத்துள்ள சி.சாத்தமங்கலம், நகராமலை கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, சிதம்பரம் வனத்துறை அலுவலர் பன்னீர்செல்வம், வனவர்கள் ராம்குமார், அன்புமணி ஆகியோர் பாதிப்பு ஏற்படுத்திய கிராமத்திற்கு சென்று, கூண்டு வைத்து பிடித்து, குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

