/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
கணவன், மனைவியை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : செப் 06, 2011 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : முன்விரோத தகராறில் கணவன், மனைவியை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த சிவஞானம், 45. கண்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தயாளன், 50. உறவினர்கள். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தயாளன், அவரது ஆதரவாளர்கள் குண்டுஉப்பலவாடி ரஞ்சித், 23, ஜெயவேல், 30 ஆகியோர் சேர்ந்து சிவஞானம், அவரது மனைவி கலைச்செல்வியை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து தயாளன், ரஞ்சித், ஜெயவேல் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

