/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன் மீட்பு
ADDED : ஜன 22, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே 40 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்த பசுங்கன்றை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
பெண்ணாடம் அடுத்த சின்ன கொசப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வ விநாயகம். விவசாயி. இவர் வளர்க்கும் 1 வயதுடைய பசுங்கன்று நேற்று மாலை 6:30 மணியளவில், துள்ளித்திறிந்தது.
அப்போது வீட்டின் பின்புறம் இவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் எதிர்பாராத விதமாக பசுங்கன்று தவறி விழுந்தது.
தகவலறிந்து இரவு 7:00 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் 7:30 மணியளவில் பசுங்கன்றை உயிருடன் மீட்டனர்.